LLA ஆன்லைன் திட்டத்தின் ஒவ்வொரு வழிகாட்டிகளும், லைட் அண்ட் லைஃப் அகாடமியில், புகைப்பட கலையில் முதுகலைப் பட்டம் பெறுவதற்கு மிகவும் கடுமையான பயிற்சிகளை பெற்றுள்ளனர். அவர்கள் தற்போது இந்தியா முழுவதும் தங்கள் புகைப்பட கலை பயன்படுத்தி வருவதுடன், இவர்கள் பல்வேறு கலாச்சார பின்னணியில் பயிற்சிகளை மேற்கொள்வதால், பல்வேறு அழகியல் உணர்வுகளின் ஒரு புதையலாக இருக்கிறார்கள். எல்லோரும் LLA வில் ஒரே தரமான தொழில்நுட்ப மற்றும் கலை பயிற்சி பெற்று பட்டம் வாங்கியதால், அவர்களின் கருத்துக்களும், வழிகாட்டுதலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

Ankit Gupta
அன்கிட் குப்தா டெல்லியில் வளர்ந்தார். கிரிக்கெட்டின் ஒரு பெரிய ரசிகர், அவர் டேபிள் டென்னிஸ் மற்றும் பேட்மின்டன் தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மகிழ்ச்சிகரமாக விளையாடினார் . அந்த நேரத்தில், மற்றவர்களை போலவே, பள்ளி படிப்பை முடித்த பிறகு, மேற்படிப்புக்கு இரண்டு வழி இருந்தது – பொறியாளராகவோ அல்லது மருத்துவராகவோ ஆவது. அன்கிட் பொறியியல் படிப்பை தேர்வு செய்து, பட்டப்படிப்பு முடித்தார்.
அவர் கல்லூரியில் இருந்து நேரடியாக இன்ஃபோசிஸில் வேலை கிடைத்து, மைசூர் கிளையில் பணியமர்த்தப்பட்டார். அவரது தாயார் மைசூர் நகருக்கு செல்வதற்கு முன்பு அவருக்கு டிஎஸ்எல்ஆர் பரிசளித்தார். இது அங்கிட்டிற்கு ஆரம்பமானது. வெளிநாட்டில் தனது எம்பிஏ படிக்கும் எண்ணத்தில், அவர் 4 ஆண்டுகளாக இன்ஃபோசிஸில் பணிபுரிந்தார். இந்த எண்ணம், மைசூர் மைதானத்தில், வீட்டின் உரிமையாளருடன் நடந்த ஒரு உரையாடலின் போது மாறியது. அவர் தனியாக வாழ்ந்து வரும் ஒரு வயதான பெண்மணி, அவர் குழந்தைகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தார். அங்கிட்டுக்கு வெளிநாடு செல்லும் ஆர்வம் இருந்ததால், பிள்ளைகள் எப்பொழுது வருவார்கள் என விசாரித்தான். அதற்கு அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வந்ததக தெரிவித்தார். அங்கித்தின் திட்டம் முற்றிலும் மாறியது.
இதன் பிறகு, இந்தியாவிலேயே தங்குவது, மற்றும் குடும்பத்தாரிடம் நெருங்கி வாழ முடிவு செய்தார். அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விட்டுவிட்டு தில்லிக்கு திரும்பிச் சென்றார். அவர் தந்தை வணிகத்தில் விருப்பமில்லை என உணர்ந்து புகைப்பட எடுப்பது என முடிவெடுத்தார். அவரது புகைப்படங்களின் தரம் பற்றி அவரது நண்பர்களும் குடும்பத்தாரும் தொடர்ந்து ஊக்கம் அளித்தது அவரது நம்பிக்கையை அதிகரித்தது. அவர் காஷ்மீரில் உள்ள மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் இருந்தார், அங்கு புகைப்படம் எடுப்பதற்கான அவர் ஆர்வத்தை உணர்ந்தார். ஏனென்றால் அவர் அந்த நேரத்தில் கைப்பற்றப்பட்டு, நித்தியத்திற்காக அதை காப்பாற்றிக் கொண்டார். நிலையில்லா இந்த உலகத்தில் நிலைகளை பதிவு செய்ய விரும்பினார்.
சுற்றுலா, இயற்கை, கட்டிடக்கலை மற்றும் உள்துறை புகைப்படம் ஆகியவற்றை சிறப்பாக புகைப்படம் எடுக்க கற்றுக் கொண்டார். தனது அறிவை புகைப்பட துறையில் பேரார்வம் கொண்டவர்களுக்கு திருப்பி தருவதற்கு LLA ஆன்லைன் ஒரு தளமாக அமையும் என்பதை உணர்த்துள்ளார் .

Garima Chaudhary
கரிமாவின் கலை ஆர்வம் 8வது படிக்குக்கும் போது தொடங்கியது. அப்போது இருந்தே அவர் இந்தியாவில் உள்ள சிறந்த கலை கல்லுரியை தேட ஆரம்பித்தார். அவரது 12 ஆம் வகுப்பிற்கு பிறகு சிவில் சேவையின் பாதையை எடுத்து வரலாற்றைப் படித்தார். அதை அவர் நன்றாக படித்தார், ஆனால் எதோ ஓன்று குறையாக உணர்ந்தார். அதிக மதிப்பெண் மட்டுமே அவருக்கு சந்தோஷம் தரவில்லை. அவர் தேடல் வேறு எதோ இருந்தது. அதன் பிறகு, பெற்றோருக்குத் தெரியாமலே, கலை படிப்புக்கு விண்ணப்பித்து தேர்வும் ஆனார்.
அந்த படிப்பில் அவருக்கு புகைப்பட கலையை பற்றி அறிமுகம் கிடைத்தது. கையில் விவதார் இருந்ததால், ஒரு புகைப்படக்காரனாக தனது பயணம் தொடங்கியது. அவர் கற்பனை காட்சிபடுத்துபவராக ஆக பணிபுரிந்தார் மற்றும் டிஜிட்டல் மீடியாவில், அனிமேஷன் சிறப்பு பாடம் எடுத்து தனது முதுகலை பட்டம் பெற்றார். தொடர்ந்து தன் பெற்றோருடன் போராடி, கலைக்கான தன் பேரார்வத்தை நிலை நாட்டி, தொழில் முறையிலும், வருமான முறையிலும் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து கொண்டார்.
அவரது படைப்பு மற்றும் புகைப்படத் திறன்கலால் ஈர்க்கப்பட்ட அவரது கணவர், அவருக்கு DSLR கேமராவை பரிசாக அளித்தார். பின்னர் அவர் எல்எல்ஏவில் விண்ணப்பித்து தொழில்முறை புகைப்படத்தில் முதுகலை பட்ட படிப்பில் சேர்ந்தார். கரிமா 2011-ல், பல்வேறு மின் வணிகம் தளங்களுக்கான புகைப்பட வேலைகளை செய்து அதன் உச்சக்கட்டத்தை அடைந்தார். அவர் 2011- ல் தனது முதல் ஸ்டூடியோவைத் திறந்து, நிறைய வேலைகள் செய்தார், கலை மற்றும் புகைப்படம் எடுத்தல் பற்றிய தனது அறிவைப் பயன்படுத்தி கொண்டு, தனக்கு என்று ஒரு பணியை உருவாக்கி கொண்டார்.
இவர் இப்பொழுது, பெங்களூரில், கலை இயக்குனர், கிராபிக் டிசைனர், ஓவியர், புகைப்படக்காரர் மற்றும் பதிவளராக உள்ளார். கரிமா, புகைப்படம் என்பது மக்களுக்கான ஒரு கலை வடிவம் என்று உறுதியாக நம்புகிறார். பல மொழிகளில் உருவாக்கபடும் LLA ஆன்லைன், பல மக்களை சென்றடையும் என்பதே இவருக்கு மிகுந்த ஆர்வத்தை அளித்தது! எல்.எல்.ஏ ஆன்லைனில் எங்களுக்கும் உற்சாகமாக உள்ளது!

Kavitha Swaminathan
திருப்பூர் சேர்ந்த செல்வதிலும் செல்வாக்கிலும் சிறந்து குடும்பத்தில் இருந்து வந்ததால், ஒவ்வொரு வாரமும் கவிதா, ஒரு நல்ல கைச்செலவுப்பணத்தோடு பள்ளியில் பிரவேதித்து வந்தார். ஆரம்பத்தில் இருந்தே அவர் ஒரு விஷயம் பற்றி மிகவும் உணர்ச்சி வசப்படுவர். அது சாக்லேட்ஸ். இது அவரது நீண்டகால பாசம். இது நாள் வரை, நாம் அடுத்த துண்டுக்கா காத்திருக்கும் நேரத்திற்குள் கவிதா ஒரு முழு சாக்லேட்யை அப்படியே சாப்பிடுவர் . பள்ளியில், ஒரு மருத்துவர் ஆகும் நோக்கத்துடன், அவர் விரும்பும் பாடங்களான இயற்பியல், விலங்கியல் மற்றும் தாவரவியல் மட்டும் தான் அவர் கவனம் செலுத்தினர்.
மருத்துவ படிப்பில் சேர்த்த ஒரு வாரத்தில் நிச்சயமாக முடிக்க முடியாது என்று முடிவு செய்தார். பின்னர் அவர் பி.காம் படிப்புக்கு விண்ணப்பிக்க முயற்சி செய்தார், ஆனால் அது மிகவும் தாமதமாக இருந்தது, மேலும் அனைத்து கல்லூரிகளும் தங்கள் சேர்க்கை நடைமுறைகளை முடித்துவிட்டன. கவிதா, நடந்ததை திரும்பி பார்க்கும் போது இந்த நிகழ்வை வேறு ஒரு வகையில் ஆசீர்வாதமாக நினைத்தார். சிறிய தேர்வுக்குப் பிறகு, அவர் பெருந்துறை மஹாராஜா கல்லூரியில் காட்சி தொடர்பியல் பாடத்தில் சேர்ந்தார். ஒரு பெண்டாக்ஸ் கே 1000, ஒரு இருண்ட அறை மற்றும் அவரது மனதில் நுணுக்கங்கள் மற்றும் மூலையில் ஆராயும் சுதந்திரம், இவை அனைத்தும் ஆயுதமகா சேர்ந்து கவிதாவினுள் இருக்கும் புகைப்படம் சக்தி உணர்த்தியது.
இந்த கல்லூரியில் 1500 பேருக்கு மேல் இருந்தாலும் , 6 விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் மிகவும் விரும்பப்பட்டனர். பிறகு, யார் தான் தங்களின் ஒரு நல்ல படத்தை விரும்ப மாட்டார்கள். புகைப்படம் எடுப்பது அவளுடைய உணர்ச்சிகளை தூண்டிவிட்டது, என்கிறார் கவிதா. படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் போது, நாய்களின் வலியை உணர முடிந்தது, முகத்தை வருடும் தென்றலை உணர முடிந்தது, மலர்கள் மற்றும் வானங்களின் நிறங்களால் ஈர்க்கப்பட்டார் . அவளை சுற்றி உலகம் முழுவதும் வரம்பற்ற அழகு பரவியது. இவரின் உலகம் புகைப்பட கலை மூலம் அழகானது.
கவிதா, புகைப்படம் எடுப்பதே தன் வாழ்நாள் பயணமாக எடுத்துக்கொண்டார். 2002 ல் அவர் LLA -ல் படித்தார், இங்கு ஒவ்வொரு நாளும் ஒரு வெளிப்பாட்டை உணர்ந்தார். படிப்பிற்கு பிறகும், தொழில் முறை புகைப்படகாரராக வளர வேண்டும் என்று அவர் எப்போதும் உணர்ந்திருந்தார். வாழ்க்கையில் என்றுமே ஒரு மாணவராக இருந்து அறிவு தாகத்தை தணிக்க ஒரு புகைப்பட கலைனராக முடிவெடுத்தார். அவர் லைட் & லைப் அகாடமியில் முழுநேர வேலை செய்கிறார், கல்லூரியின் கல்வித் தரங்களை கண்காணித்து வருகிறார், அதே நேரத்தில் அவர் ஊட்டி மக்கள், இடங்கள் மற்றும் நினைவுகள் ஆகியவற்றைக் புகைப்படம் எடுக்கிறார்.
LLA-ல் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்வதன் மூலம் அவர் அறிவு மேலும் ஆழமாகிறது . புதிய படைப்பாளிகளை நாளும் சந்திப்பது, புகைப்பட துறையில் ஆழத்தை அறிவது போன்றவை இவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. LLA ஆன்லைன் இவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனெனில், இது 9 மொழிகளில் வெளியாகி, பல்வேறு இடங்களில் உள்ள புகைப்பட ஆர்வலர்களுக்கு புகைப்படம் கற்கும் வாய்ப்பை தருகிறது.

Khushboo Agarwal
நினைவுகளில் பின்னோக்கி சென்றால், என் அப்பா – குழந்தை வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை கல்கத்தாவில் அமைத்து விட்டு, சொந்த வணிக அமைக்க, சென்னை சென்றது மிகவும் தைரியமான முடிவு என்பேன். இதனால் வடஇந்திய பழக்க வழக்கத்தில் வேரூன்றி இருந்தாலும், அதே நேரத்தில் தமிழ் மக்களின் உணவு, கலாச்சாரம் மற்றும் இடம் ஆகியவற்றோடு ஒரு அருமையான இணைப்பையும் நான் கொண்டிருந்தேன். அப்பா சொன்னது போல வெவ்வேறு விதமான வாழ்க்கை முறை இது.
பள்ளியில், நடனம், நாடகம், விவாதங்கள் ஆகியவற்றில் நான் கலந்து கொண்டாலும், பாடுவது அவ்வளவு சிறப்பாக இல்லாத போதும், நான் பள்ளி பாடகராக இருந்தேன். எது இருந்தாலும், படிப்பது தான் எனக்கு முன்னுரிமை. இருப்பினும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவு அறிவிக்கப்பட்டன போது எல்லாம் மாறியது மற்றும் நான் பள்ளியில் 5 வது இடம் மட்டுமே வகிக்க முடிந்தது.
என் நம்பிக்கை அதிர்ந்தது. இது கணக்கிடுவதற்கான நேரம். நான் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதை எளிதாக்க முடிவெடுத்தேன். நான் உண்மையில் அனுபவித்து என்ன என்பதை உண்டர்த்தேன், அது நடனம்.
இந்த காணோட்டத்தை மாற்றிய போது ஒரு நடன கலைஞராக பல பரிசுகளும் அங்கீகாரம் கிடைக்கும்
Bharathnatyam, Kathak மற்றும் Ghooomar ஆகிய நடனங்களை அனுபவித்தேன். நான் ஜீவ், சல்சா மற்றும் பச்சாதாவைச் சேர்த்தேன். வாழ்க்கை நன்றாக இருப்பதாக உணர்தேன். படிப்பு மட்டுமே என் வாழ்கை இல்லை என உணர்தேன்.
விசுவல் கம்யூனிகேஷன் படம் படித்த போது புகைப்பட கலை பற்றியஅறிமுகம் ஒரு திருப்பு முனையாக அமைந்ததது . இதனால் ஒரு புதிய உலகத்துடன் இணைக்க எனக்கு வாய்ப்பளித்தது. இயற்கையால் படைக்கப் பட்டது முதல் மனிதனால் உருவாக்க பட்டது வரை என்னை ஆட்கொண்டது. அதில் இருந்து ஒவ்வொரு நொடியும் நான் வாழ கற்றுக் கொண்டேன் .
இன்று, நான் இன்னும் பலவற்றை தேடுகிறேன். ஒரு புகைப்பட கலைஞராக தொழில் அமைத்துக் கொண்ட பிறக்கும், நடனம் ஆடவும்பு, அதை கற்பிப்பதற்கு நேரம் ஒதுக்குகிறேன். காலப்போக்கில் நான் ஒளிப்பதிவை ஆராய நினைக்கிறேன்.
இப்போது புகைப்படம் எடுத்தல் பற்றிய மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அருமையான வாய்ப்பை கிடைத்ததும், அவர்களது படைப்பாற்றல் திறனை LLA ONLINE -ல் காண்பதையும் மிகவும் மகிழ்ச்சிகரமாக உணர்கிறேன்.

Rejoi Krishna
என்ஜினியரிங் அல்லது மெடிக்கல் படிப்புகளை தேர்வு செய்யும் நடுத்தர வகுப்பு தென்னிந்திய குடும்ப நபராக நான் என் விருப்பத்தை கொண்டிருக்க வில்லை. ஆனால், கோயம்புத்தூரில் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியல் ஆய்வு படிக்க நான் இலட்சியம் இருந்தேன். நான் இரண்டாம் ஆண்டு படிக்கும் போடு எனது கல்லூரியில் விஸ்காம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விஸ்காம் மாணவர்களோடு கிடைத்த நட்பும் அவர்கள் என்னை பொழுது போக்காளர் என அழைக்க ஆரம்பித்தனர். இதனால் ரேடியோ மிர்ச்சியில் ஒரு ஆர்.ஜே. வாக இருந்த நேரத்தில், நான் மிகவும் பிரபலமானேன். ஏழு வருட பணிக்கு பிறகு, ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். புகைப்பட கலையில் என் ஆர்வத்தை ஆராய தொடங்கினேன். நான் கேள்விப்பட்ட விஷயங்களைப் மற்றவர்களோடு பகிர்வதை விட, நான் பார்த்த விஷயங்களை இப்போது பகிர்கிறேன்.
புகைப்பட கலை உலகில் நன் இணைய நான் முடிவெடுத்தேன். தொழில் முறை புகைப்பட கலைஞராகும் என் கனவை நினைவாக்க, புகைப்படம் எடுத்தல் பற்றிய நுணுக்கங்களையும், தொழில் நுட்பத்தியும் கற்பதற்கு எல்.எல்.ஏ- ல் சேர முடிவெடுத்தேன்.
எல்.எல்.ஏ. – ல் கிடைத்த அறிவுறுத்தலுக்கு, கற்பிக்கும் பாங்கும் என்னை ஆச்சரிய படுத்தியதுடன், அறிவைப் பெற ஒரு வயது வரம்பு இல்லை என்று எனக்கு உணர்த்தியது. எல்.எல்.ஏ.-ல் தந்த உள்ளீடு, அறிவு மற்றும் உற்சாகம் அனைத்தும், நான் இன்று என்னவாக இருக்கிறேன் என்பதற்கு அடித்தளமாக அமைந்தது. இப்போது நான் ஒரு கட்டடக்கலை, பேஷன், ஆட்டோமொபைல் மற்றும் பயண புகைப்படக்காரர் என்ற என் கனவை தொடர்கிறேன்.
மற்றவர்களுடன், நான் கற்றுக்கொண்டவற்றை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு ஆன்லைன் மூலம் எனக்கு கிடைக்கிறது.

Sathish Kumar Raju
பல்வேறு தலைமுறையில் புகைப்படகாரர்களாக இருந்த குடும்பத்தில் சதிஷ் வளர்ந்தார். அவரது பெரிய தாத்தா 1904 ஆம் ஆண்டில், பாண்டிச்சேரில் ஒரு ஓம்னி புகைப்பட ஸ்டூடியோ என்னும் ஒரு சிறிய ஸ்டூடியோவை நிருவாகித்தார். சதீஷின் முதல் புகைப்பட மிக மிக மெல்லிய நினைவு என்பது, வீட்டில் அவர் அப்பா அச்சிட்டு மாட்டி இருந்த பெரிய அளவிலானா புகைப்படம் ஆகும்.
வீட்டின் மொட்டை மடியிலும் , முற்றத்திலும் இருந்த அச்சிடப்பட்ட புகைப்படங்கள் இன்னும் அவர் நினைவூட்டுகிறார். அவர் பாட்டியின் குளிர்ந்த தண்ணிரை ஒத்த கைகளையும், மயக்கம் தரும் முகத்தையும் இன்னும் அவர் புகைப்படத்தின் மூலம் உணர்கிறார். அவர் முதலில் அச்சிட்டது ஒருவரின் புகைப்படம். மெதுவாக அது தன்னுள் இருக்கும் மாயத்தை வெளிக்காட்ட தொடங்கியது. ஆம், இவரின் அப்பா ஒரு மந்திரவாதி போன்றவர். அதன் பிறகு அவர் புகைப்பட கலையோடு இணைத்து விட்டார். இவர் சென்னை, லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் பி.எஸ்.சி. தேர்வு செய்ததும், தனது பேரர்வமான புகைப்பட கலையில் ஆர்வத்ததை தொடர்ந்ததும் பெரிய திட்ட செயல் இல்லை.
இவர் இக்பால் முகமதுவின் அணைப்பில் வளர்ந்தார். LLA இல் இரண்டு ஆண்டுகள் பணிபுரியும் அதே நேரத்தில், புகைப்படக் கலையை முறையாகப் படிப்பதன் முக்கியத்துவத்தை அவர் புரிந்துகொண்டார்.
இதனால் 2006 ஆம் ஆண்டில் பாடத்திட்டத்தில் சேர முடிவெடுத்தார். இதன் பிறகு இக்பால் அவரின் பல்வேறு படப்பிடிப்புகளில் உதவிய இருந்தார். இந்த சமயத்தில் தனது கூர்நோக்கு தன்மையால் அவர் அதிகம் கற்றுக்கொண்டார். புகைப்படம் எடுப்பது மட்டும் அல்லாமல் பல்வேறு கலாச்சாரத்தை பற்றியும், உணவு, வாழ்கை முறை மற்றும் மக்கள் என பலவற்றை கற்றுக்கொண்டார். இந்த அறிவால், தற்போது இந்தியாவின் சிறந்த ஆட்டோமொபைல் புகைப்படகாரராக தன்னை வடிவமைத்துக்கொண்டார் .
அவர் லைட் & லைப் அகாடமியில் முழு நேர படிப்பில் ஒரு ஆசிரியராகவும் இருக்கிறார். சதீஷின் திருப்திப்படுத்தப்படாத தாகம் என்பது, புகைப்பட கலையை பற்றி சமுதாயத்தில் பலரும் தொழில் ரீதியாகவோ, பொழுதுபோக்கிற்கோ கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆகும்.
அவரை பொறுத்த மட்டில் புகைப்பட கலையை பற்றி பல்வேறு ஆன்லைன் பாடங்கள் இருந்தாலும், ஆசிரியர்களின் கருத்தை அறிய வாய்ப்பு இல்லை. கற்றல் முறையில் உள்ள எந்த முக்கிய அம்சம் காணப்படவில்லை. எந்த இடத்தை LLA ஆன்லைன் மூலம் சதிஷ் பூர்த்தி செய்ய விரும்புகிறார்.

Shantonobho Das
சாந்தனோபோ தாஸ் புகைப்பட கலைக்கு அறிமுகம் கிடைத்தது என் தந்தை ஒலிம்பஸ் மூலம் . முதன் முதல் அவரின் கமராவில் காட்சிகளை பார்த்தது மிகவும் கண்கவர் விதமாக அமைந்தது. நீல வானம், பரந்த சமுத்திரங்கள் மற்றும் தெளிவான வானவில் படங்கள் ஆகியவை என் கேமராவின் லென்ஸின் மூலம் இன்னும் அழகாகப் இருந்தது. இது புகைப்படம் எடுக்கும் என் ஆர்வத்தை பலப்படுத்தியது.
என் குழந்தை பருவத்தில் அம்மாவுக்கு சமையலில் உதவி செய்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். பள்ளிக்குப் பிறகு, நான் வணிகத்தில் ஒரு பட்டப்படிப்பை மேற்கொண்டேன்; ஆனால் படங்களைப் பயன்படுத்தி என்னை வெளிப்படுத்துவது உண்மையிலேயே என் தேடல் என்பதை உணர்ந்தேன். நான் ஒரு இடைவெளி எடுத்து, ஒரு கப்பலில் உலக பயணம் மேற்கொண்டேன் .
இதனால் பல்வேறு பொருட்கள் மற்றும் இடங்களை என்னால் படம் பிடிக்க முடிந்தது. பயணத்தின் முடிவில் நான் என் வாழ்நாள் முழுவதும் புகைப்படம் எடுக்கக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இது லைட் அண்ட் லைப் அகாடெமியை நோக்கி என்னை வழிநடத்தியது. LLA -வின் நடைமுறை அமர்வுகள், செயல்விளக்கம் மற்றும் பணிகள் என்னை மிக கவர்ந்தன. மேலும், எனது நியமிப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக மனிதர்கள் மற்றும் இயல்பான இயற்கை ஆராய ஆரம்பித்தேன்.
இன்று, நான் என் புகைப்படத்தை ஆராய்கையில் கூட, உணவுக்காக என் விருப்பத்தை உணர்கிறேன். சமையல் செய்யும் போது நடந்த ஆய்வுகளையும் அதை பகிர்ந்து கொண்டதும் நினைவில் உள்ளது. பகிர்ந்து கொள்ளும் போது அறிவு மேலும் அதிகரிக்கும் என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். திரு. இக்பால் மற்றும் என் மற்ற வழிகாட்டிகள் எனக்கு என்ன கற்றுக் கொடுத்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்வதற்கு LLA Online ஒரு பரந்த தளத்தை வழங்குகிறது.

Sukil Tarnas
என் இளமை காலத்தில், என் குடும்ப நண்பரான ஒரு பாதிரியார் வாழ்வில் கவர்ந்திழுக்கபட்டேன். அவர் ஒரு பைக் பெயரில் நகரத்தில் சவாரி செய்வார். மேலும் தன்னை சுற்றி ஒரு ஒளியையும் அதிகாரத்தியும் கொண்டிருந்தார். இவரின் தாக்கத்தால் நான், நானாக இருக்க முடிவு செய்தேன். ஒரு சிறிய பள்ளியில் படித்தா பிறகு, என் தேடல் இது அல்ல என் உணர்ந்து சென்னை லயோலா கல்லூரியில் படிக்க ஆரம்பித்தேன்.
உள்ளூர் பள்ளியில் படித்துவிட்டு, பின்னர் லயோலா போன்ற உயர்நிலை கல்லூரியின் சேர்ந்தது, எனக்கு பாதுகாப்பற்றதாக இருந்தது. என் அறிவியல் மதிப்பெண்கள் நன்றாக இருந்ததால் நான் வேதியியல் தேர்வு செய்தேன். ஆனால் மொழி தடையினால் நான் பல வகுப்புக்களுக்கு செல்லாமல் தவிர்ப்பதற்காக, பல கூடுதல் பாடத்திடங்களில் கலந்து கொண்டேன். நான் கலை மற்றும் கைவினை செயல்பாடுகளில் மிகவும் ஆர்வமாக இருந்ததால், விடுதி அலங்காரம், கல்லூரியில் மாணவர் நடவடிக்கை சுவரொட்டிகள் போன்றவற்றை உருவாக்க உதவினேன்.
அந்த நேரத்தில், நான் வேர்ல்ட் சோசியல் forum -ல் ஈடுபட்டேன், அது அந்த நேரத்தில் ஒரு பெரிய விஷயம். ஹைதராபாத்தில் வெளிநாட்டவர் சிலர் சேர்ந்து, ஆசிய சமூக அரங்கத்தை துவக்கியபோது என் தந்தையார் ஹென்றி என் முதல் டிஎஸ்எல்ஆர் கேமராவை 4 படத்தொகுப்புடன் கொடுத்தார். நான் கொஞ்சம் தடுமாறினேன், அனால் ஷட்டர் 1 /125 லும் மற்றும் ISO 100லும் அமைக்க சொன்னார். நான் ஏதாவது சரியாக செய்திருக்க வேண்டும், ஏனெனில் அப்பா ஹென்றி என்னை பொறுப்பேற்க தேர்வு செய்ததுடன், எனக்கு லயோலாவில், விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பில் சேர்த்து விட்டு, என் படிப்பு செலவை சமாளிக்க பல்வேறு புகைப்படம் எடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.
இங்கே நான் திரு இக்பால் அவர்களை சந்தித்த போதே LLA-வில் நான் இணைத்ததாக உணர்ந்தேன் . நான் எல்.எல்.ஏ-ல் இணைந்து தொழில்முறை புகைப்படம் திட்டம் பயில ஆரம்பித்தேன். இக்பால் ஐயாவுடன் நெருக்கமாக பணிபு ரிந்தேன், தொழில்துறை புகைப்படத்தில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது, அதையே அதிகப்படியான வேலையை செய்தேன். நான் உணவுப் புகைப்படம் எடுப்பதையும் விரும்புகிறேன் ஏனெனில் நானே ஒரு உணவு பிரியர்.
நான் LLA ஆன்லைன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனெனில் நன் கற்றது போலவே இதுவும் கட்டமைக்கப் பட்ட திட்டமாகும். நான் இப்போது பலர் அதே அனுபவங்களை அனுபவிக்க உதவுவேன்.
